என்னதான் செய்வது..? இன்றும் தங்கம் விலை உயர்ந்து விட்டது..! சவரன் எவ்வளவு தெரியுமா..?

thenmozhi g   | Asianet News
Published : Jan 11, 2020, 12:17 PM IST
என்னதான் செய்வது..? இன்றும் தங்கம் விலை உயர்ந்து விட்டது..! சவரன் எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து 3820.00 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது. 

என்னதான் செய்வது..? இன்றும் தங்கம் விலை உயர்ந்து விட்டது..! சவரன் எவ்வளவு தெரியுமா..? 

புத்தாண்டு பிறந்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூபாய் 31ஆயிரத்தை தாண்டியாது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து 3820.00 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 50 பைசா அதிகரித்து 50.60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்