
மாலை நேரத்தில் தங்கம் விலை மாற்றம்..! எவ்வளவு தொகை தெரியுமா..?
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்ந்த பின்னர், சவரன் விலை 4 ஆயிரம் வரை உயர்ந்து, சவரன் ரூபாய் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
பின்னர் மீண்டும் சற்று குறைய தொடங்கிய தற்போது 28 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக அப்போது தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறைந்து வந்தது. இந்த நிலையில் அவ்வப்போது மீண்டும் உயர்ந்து சவரன் 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
செய்கூலி சேதாரம் என சேர்த்து ஒரு சவரன் விலை 32 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 45 ரூபாய் குறைந்தும்,சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனை ஆகிறது
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
கிராம் ரூ. (-45) குறைந்து, 3597.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.360 குறைந்து, 28 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனையாகிறது
மாலை நேர நிலவரப்படி,
கிராமுக்கு ரூ.1 குறைந்து 3596.00 ரூபாயாகவும் சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 50.50 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.