முதல் "தனியார் ரயில் சேவை" இன்று முதல்...! இந்தியாவில்....!

Published : Oct 04, 2019, 04:32 PM ISTUpdated : Oct 04, 2019, 04:39 PM IST
முதல் "தனியார் ரயில் சேவை" இன்று முதல்...! இந்தியாவில்....!

சுருக்கம்

அக்டோபர் 4ம் தேதியான இன்று காலை சரியாக 6.10மணிக்கு கிளம்பி 12.25 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் மீண்டும் டெல்லியில் இருந்து மாலை 3.35 மணிக்கு கிளம்பி இரவு 10.05 மணிக்கு லக்னோ வந்தடையும்  

முதல் "தனியார் ரயில் சேவை" இன்று முதல்...! இந்தியாவில்....!

லக்னோ- புதுடில்லி இடையே முதல் தனியார் ரயில் சேவை இன்று இயக்கப்பட்டது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கிவைத்தார். முதல் நாளான இன்று  389 பயணிகள் பயணம் செய்தனர். அக்டோபர் 4ம் தேதியான இன்று காலை சரியாக 6.10மணிக்கு கிளம்பி 12.25 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் மீண்டும் டெல்லியில் இருந்து மாலை 3.35 மணிக்கு கிளம்பி இரவு 10.05 மணிக்கு லக்னோ வந்தடையும்

இந்த ரயில் லக்னோவில் இருந்து நாளை மறுதினம் முதல் ரெகுலராக இயக்கப்படும். ஆனால் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் சேவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கான்பூர் மற்றும் காசியாபாத் இந்த இரண்டு நகரங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும் என்பது கூடுதல் தகவல்.

லக்னோவில் இருந்து டெல்லிக்கு 6 மணிநேரம் 15 நிமிடங்களில் சென்றடைய முடிகிறது. இதனால் பொது மக்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தனியார் ரயில் சேவை என்பதால் அனைவர் மத்தியிலும் ஒரு விதமான எதிர்பார்ப்பும் கிளம்பி இருக்கிறது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்