தலைக்கு ரூ.5000 மதிப்புள்ள பலன்... இன்னும் மூன்றே நாட்களில் எடப்பாடி அரசு அதிரடி..!

Published : Jan 07, 2019, 03:03 PM ISTUpdated : Jan 07, 2019, 03:04 PM IST
தலைக்கு ரூ.5000 மதிப்புள்ள பலன்... இன்னும் மூன்றே நாட்களில் எடப்பாடி அரசு அதிரடி..!

சுருக்கம்

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தை வரும் 10ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தை வரும் 10ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

கிராமப்புற ஏழை எளிய மக்கள் மற்றும் விதவைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத்திட்டத்தை வரும் 10ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், கிராமப்புற ஏழைப்பெண்கள் 77,000 பேருக்கு, தலா 50 நாட்டு கோழி குஞ்சுகளும், அவற்றை பாதுகாக்க ஏதுவாக 2,500 ரூபாய் மதிப்புள்ள கூண்டுகளும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டம் 50 கோடி ரூபாய் செலவில் செயல் படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை