
லடாக்கில் தோனி ...! சுதந்திர தினத்தன்று ராணுவ வீரர்களுடன் வீரசார பேச்சு..!
நாட்டின் 73 ஆவது சுதந்திர தினமான இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் மக்கள்.
ராணுவத்தில் கவுரவ பதவி வகித்து வரும் தோனி இன்று லடாக்கில் இராணுவ வீரர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து வரும் தோனிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது பாராசூட் ரெஜிமென்ட் படை பிரிவில் பயிற்சி பெற்று வரும் தோனி தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றியும் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று லடாக் சென்று ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார். அப்போது அவருக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்தனர் வீரர்கள்.
தோனியின் இந்த புகைப்படத்தை அவருடைய கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.