1000 வருடத்திற்கு பிறகு ஒரே நேர்கோட்டில் இணையும் கிரகங்கள்...மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்...

By Anu KanFirst Published Apr 28, 2022, 6:33 AM IST
Highlights

Horoscope: 1000 ஆண்டுகளுக்குப் பிறகு கிரகங்களில் முக்கியமானதாக கருதப்படும், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் இந்த வாரம் ஒரே நேர்கோட்டில் இணைகின்றனர். இதனால் எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1000 ஆண்டுகளுக்குப் பிறகு கிரகங்களில் முக்கியமானதாக கருதப்படும், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் இந்த வாரம் ஒரே நேர்கோட்டில் இணைகின்றனர்.

சூரிய கிரகணம்:

2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி மேஷ ராசியில் நிகழ உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, ​​சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை ஏற்படும். அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 

ஜோதிடத்தின் படி, அசுபமாக கருதப்படும் சூரிய கிரகணம் 12 ராசிக்கும் வெவ்வேறு பலன்களை தரும். சிலருக்கு சாதகமாகவும் இருக்கும். அப்படியாக, ஜோதிடத்தின் கூற்றுப்படி சூரிய கிரகணம் நாளில் இந்த மூன்று ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். 

மேஷம்:

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசியில் நடைபெறுகிறது. எனவே இது உங்கள் ராசிக்கு நேரடி விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், நீங்கள் பயணம் செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். உறவினர்கள், உங்களை தள்ளிவைக்கலாம். பணியில் தோய்வு ஏற்படும். எதிரிகள் ஆதிக்கம் செலுத்தலாம். அதேபோன்று, இந்த நேரத்தில் வீடு, வாகனம் வாங்குவதை தள்ளிவைக்கவும். 

கடகம்:

கடகத்தை ஆளும் சந்திரன் கிரகம், சூரிய கிரகணத்தின் போது ராகுவுடன் மேஷ ராசியில் பயணிப்பார். இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தும். பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தும். எதிலும், பொறுமையை கடைபிடிப்பது அவசியம். இந்த காலகட்டத்தில் பல்வேறு செலவுகள் வரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இந்த நாளில் மற்றவர்களின் பேச்சை கேட்காமல் இருப்பது அவசியம். சிந்தனையுடன் மற்றவர்களிடம் பேசுங்கள், ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து செயல்படுங்கள். உங்களுக்கு எதிரிகள் தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். செலவுகள் உண்டாகும். தொழிலில் நஷ்ட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்:

 சூரிய கிரகணத்தின் போது விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்மறை எண்ணங்களை ஆட்கொள்ளும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது அவசியம். பேச்சில் அமைதியை கடைப்பிடிக்கவும். வாகனம் செலவு வைக்கும்.  எதிலும், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க....சுக்கிரன் பெயர்ச்சி நாளில்... இந்த ராசிகளுக்கு சுக்கிரன் தசை, அடிக்கும் ஜாக்பார்ட்...இன்றைய 12 ராசிகளின் பலன்!

click me!