பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை..!

Published : Nov 12, 2020, 11:17 AM IST
பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை..!

சுருக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக நடத்தப்பட்ட பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்திலும், பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கூறியதாகவே தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவித்தது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்