34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியான அதிர்ச்சி தகவல்...!

Published : Nov 22, 2019, 06:58 PM IST
34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியான அதிர்ச்சி தகவல்...!

சுருக்கம்

ஐக்கிய அரபு அமீரகம்,கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். சொல்லப்போனால் உலகம் முழுவதுமே இந்தியர்கள் பரவி இருக்கிறார்கள்.

34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியான அதிர்ச்சி தகவல்...! 

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வளைகுடா நாடுகளில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்துள்ளதாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்,கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். சொல்லப்போனால் உலகம் முழுவதுமே இந்தியர்கள் பரவி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வது வழக்கம்.

இந்தநிலையில் ஒரு நாளைக்கு குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழப்பதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பதிலளித்த அவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டுமே 4,223 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்து உள்ளார். அதில் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய இந்த இரண்டு நாடுகளில் தான் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் நபர்களில் இந்தியாவிலேயே குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்