2020 புத்தாண்டு பலன்..! 12 ராசியினருக்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..!

By ezhil mozhiFirst Published Dec 26, 2019, 3:56 PM IST
Highlights

நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் பழமையான சிவாலயம் சென்று வில்வார்ச்சனை செய்து சிவபெருமானை வணங்க வேண்டும் உளுத்தம்பருப்பு தானமாக கொடுங்கள். தடைகள் பல விலகி சாதனை செய்ய வழிகள் உங்களுக்குப் பிறக்கும்.
 

2020 புத்தாண்டு பலன்..! 12 ராசியினருக்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..!

ஆங்கில புத்தாண்டு 2020 பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் எந்தெந்த ராசியினருக்கு இந்த ஆண்டு எப்படி அமையும் என பொதுவாக பார்க்கலாம்.

மேஷ ராசி நேயர்களே...!

இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும். ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் சென்று, வெற்றிலை மாலை அணிவித்து வணங்கி வந்தால் உங்களுக்கு பல விதங்களில் வெற்றி வாய்ப்பு வந்து சேரும். நினைத்தது நிறைவேறும்.

ரிஷப ராசி நேயர்களே..!

இந்த புத்தாண்டு உங்களுக்கு அதிரடி வளர்ச்சியை தருவதுடன் கொஞ்சம் அலைச்சலையும் பக்குவத்தையும் தருவதாக அமையும். நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் பழமையான சிவாலயம் சென்று வில்வார்ச்சனை செய்து சிவபெருமானை வணங்க வேண்டும் உளுத்தம்பருப்பு தானமாக கொடுங்கள். தடைகள் பல விலகி சாதனை செய்ய வழிகள் உங்களுக்குப் பிறக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

இந்த புத்தாண்டு அவ்வப்போது உங்களை ஆழம் பார்த்தாலும் கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் ஆண்டின் முடிவில் வெற்றியாளராக இருப்பீர்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு புதன்கிழமை தோறும் சென்று அங்கு உள்ள சக்கரத்தாழ்வாரை நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். மக்களுக்கு புளிசாதம் தானமாக கொடுக்கலாம். உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். 

கடக ராசி நேயர்களே...!

கள்ளங்கபடமற்ற பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய நீங்கள் மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 19-ம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் மிக கவனமாக இருப்பது நல்லது. இந்த நேரத்தில் செவ்வாய் 8-ம் வீட்டில் மறைவதால் சிறுசிறு விபத்துகள் பொருள் இழப்பு ஏமாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு. இந்த புத்தாண்டு பல அதிரடி முன்னேற்றங்களையும் செல்வாக்கையும் உங்களுக்கு தருவதாக அமையும். ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் அம்மன் கோவிலில் உள்ள அம்பாளை திங்கள் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை கொண்டு வணங்குங்கள். தயிர் சாதத்தை தானமாக கொடுக்கலாம்.

சிம்மராசி நேயர்களே...!

எதிலும் உடனடி தீர்வை காண வேண்டும் என முயற்சி செய்யும் உங்களுக்கு இந்த ஆண்டு பிற்பகுதி சவாலானதாக அமையும். மையப்பகுதி ஓரளவு உங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும். பகுதியில் பல அதிரடி மாற்றங்களையும் வளர்ச்சியையும் தருவதாக அமையும். நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் நவகிரகத்தில் உள்ள குரு பகவானிடம் வியாழக் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். வேர்கடலையை மக்களுக்கு தானமாக தரலாம். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

கன்னி ராசி நேயர்களே..!

நுணுக்கமாகவும் துல்லியமாகவும் யோசனை செய்யும் நபர் நீங்கள். இந்த ஆண்டு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் ஆக இருந்த உங்களை நிலைப்படுத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்து குறிக்கோளை நோக்கி செல்வீர்கள். பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதாக அமையும். பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் அருள் கொடுக்கும் ரங்கநாதன் பெருமாளை  வெள்ளிக்கிழமைகளில் துளசி தந்து வணங்கி வந்தால் நினைத்தது நடக்கும். பச்சைப்பயிறு தானமாக கொடுங்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

எதையும் கலைநயத்துடன் செய்யக்கூடிய நீங்கள் உங்களுக்கு புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய வருடமாக இந்த வருடம் உங்களுக்கு அமையும். நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் சஷ்டி திதி நடைபெறும் நாளில் முருகப்பெருமானுக்கு 2 நெய் தீபமேற்றி வணங்கினால் போதும் உங்களுடைய அனைத்து கஷ்டமும் நீங்கும் திடீர் யோகம் உண்டாகும்

விருச்சக ராசி நேயர்களே..!

கொள்கை, கோட்பாடு என எதையும் விட்டு கொடுக்காமல் செல்லும்  உங்களுக்கு, கோவில் திருப்பணிகள், ஏழைகள் திருமணங்களில் பங்கு எடுத்துக் கொள்வீர்கள். இந்த 2020ஆம் ஆண்டு உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், பிற்பகுதியில் சாதனையாளராக மாற்றும் 

தனுசு ராசி நேயர்களே...!

ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் வாதாடும் திறன் கொண்ட உங்களுக்கு, முக்கிய பொறுப்புகள் தேடிவரும். அலுவலக சூட்சுமங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு சின்ன சின்ன சிக்கல்கள், சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளைப் படைக்க தோன்றும் வருடமாக இது அமையும்.

மகர ராசி நேயர்களே...!

பிரதிபலன் பாராமல் அனைவருக்கும் உதவி செய்யும் உங்களுக்கு வரும் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வரை சனி பகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் ஏழரைச்சனியின் ஒரு பகுதியான விரையச் சனி தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் அவ்வப்போது வந்து செல்லும். ஆக மொத்தத்தில் இந்த ஆண்டு சமயோஜித புத்தியால் சாதிக்க வைப்பதுடன் வாழ்வின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வதாக அமையும். நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் ஸ்ரீபைரவரை சனிக்கிழமை தோறும் அஷ்டமி திதி நடைபெறும் நாட்களில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்குங்கள். முடிந்தால் மக்களுக்கு வாழைப்பழத்தை தானமாக கொடுக்கலாம்.

கும்ப ராசி நேயர்களே..!

இந்த ஆண்டு வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும் .ஊழியர்களால் அலைச்சல் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. இந்த புத்தாண்டு யோகத்தை கொடுக்கும் பணவரவையும் தந்தாலும் வீண் அலைச்சலையும் செலவுகளையும் தருவதாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் ஸ்ரீ துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபமேற்றி வணங்கி வாருங்கள். சர்க்கரைப்பொங்கல் தானமாக கொடுங்கள். நீங்கள் நினைத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.

மீன ராசி நேயர்களே...!

இடம்பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றாலும் குலப்பெருமையை எப்போதும் காப்பாற்றும் நபர் நீங்கள். உங்களுக்கு இந்த ஆண்டு சோர்வடைய வைத்தாலும், சவால்களில் வெற்றிபெற வைப்பதுடன் வருமானத்தையும் வாரி வழங்குவதாக அமையும். நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை வியாழக்கிழமை அன்று தீபமேற்றி மல்லிகை பூ அணிவித்து வணங்குங்கள். பச்சரிசியை தானமாக கொடுப்பது நல்லது. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.

click me!