நம்முடன் சசிதரூர் இருப்பதைப் பார்த்தல் காங்கிரசில் சிலருக்கு தூக்கம் கெடும்; பிரதமர் நகைச்சுவை!!

Published : May 02, 2025, 01:46 PM ISTUpdated : May 02, 2025, 01:58 PM IST
நம்முடன் சசிதரூர் இருப்பதைப் பார்த்தல் காங்கிரசில் சிலருக்கு தூக்கம் கெடும்; பிரதமர் நகைச்சுவை!!

சுருக்கம்

விழிஞ்சம் துறைமுகத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்தார். மேடையில் சசிதரூர் இருந்தது குறித்து மோடி கருத்து தெரிவித்தார். சசிதரூர் பிரதமரை வரவேற்ற புகைப்படம் வைரலானது.

கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

பிரதமருடன் மேடையில் சசிதரூர்:
கேரளாவின், திருவனந்தபுரத்தில் ரூ.8900 கோடி செலவில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது,  ​​கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர் சசிதரூர் ஆகியோர் மேடையில் இருப்பது குறித்து பிரதமர் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார். 

காங்கிரசில் தூக்கம் கெடும்:
பிரதமர் மோடி பேசுகையில், ''இந்த விழாவில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கலந்து கொண்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சியில் சிலருக்கு தூக்கம் கெடும். எங்கெல்லாம் இந்த செய்தி செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று இருக்கும்'' என்றார்.

திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் 
திருவனந்தபுரத்திலிருந்து நான்கு முறை காங்கிரஸ் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சசிதரூர் பற்றி பிரதமர் நேரடியாக குறிப்பிட்டது கேரள மக்களின் பாராட்டுக்குரிய ஒரு அரிய தருணத்தைக் குறிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள், குறிப்பாக கேரளாவில், சசிதரூர் குறித்து பல வாரங்களாக பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் இவ்வாறு பேசி இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

சசிதரூரின் எக்ஸ் பதிவு 
டெல்லியில் பலத்த மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  இருந்தபோதிலும், பிரதமர் வரும்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரை சசிதரூர் வரவேற்றார். பிரதமரை தரூர் வாழ்த்தும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. "டெல்லி விமான நிலையம் செயலிழந்து இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி எனது தொகுதிக்கு வந்தபோது அவரை வரவேற்க திருவனந்தபுரத்தில் சரியான நேரத்தில் தரையிறங்க முடிந்தது" என்று சசிதரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரளா காங்கிரசில் தலைமைக்கு வெற்றிடம்: சசிதரூர் 
கேரளா காங்கிரஸ் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது என்று தொடர்ந்து சசிதரூர் விமர்சித்து வந்தார். இதனால், காங்கிரஸ் கட்சி தலைமைக்கும், சசிதரூருக்கும் இடையே இடைவெளி உருவானது. கேரளாவில் ராகுல் காந்தி எம்பி காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தபோதும், அந்தக் கூட்டத்தில் சசிதரூர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களை சசிதரூர் சந்தித்து இருந்தார். ஆனால், அதுகுறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை. 

சசிதரூரை பாராட்டிய ராஜீவ் சந்திரசேகர்:
இந்த ஆண்டு மார்ச் மாதம், பாஜக கேரளா தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவின் தடுப்பூசி ராஜதந்திரத்தையும், ரஷ்யா-உக்ரைன் மோதலை அரசாங்கம் கையாண்ட விதத்தையும் ஒப்புக்கொண்ட சசிதரூரின் கருத்துக்களுக்காக அவரைப் பாராட்டி இருந்தார். ''அவர்கள் ஞானமடைந்துள்ளனர்," என்று ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்து இருந்தார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!