யோகி ஆதித்யநாத் அரசின் மெகா பிளான்... வியட்நாமில் இருந்து உ.பி.யில் பெரும் முதலீடு!

By Ganesh AFirst Published Sep 26, 2024, 8:22 AM IST
Highlights

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உபி சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024 இல் வியட்நாம் பிரதிநிதிகளை சந்தித்தார். விரைவில் வியட்நாம் நிறுவனங்கள் அம்மாநிலத்தில் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஐடி துறையில் முதலீடு செய்ய உள்ளன.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உபி சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024 இன் தொடக்க விழாவில் வியட்நாம் பிரதிநிதிகளை சந்தித்தார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் புதன்கிழமை தொடங்கிய ஐந்து நாள் உலகளாவிய தொழில்துறை நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் யோகி, வியட்நாமின் தூதர் உட்பட பல்வேறு பிரதிநிதிகளை சந்தித்தார். விரைவில் உத்தரப் பிரதேசத்தில் வியட்நாம் நிறுவனங்கள் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஐடி துறையில் முதலீடு செய்ய உள்ளன.

Latest Videos

இந்த பிரமாண்ட நிகழ்வில் வியட்நாம் பங்குதாரர் நாடாக உள்ளது. இதனால், நிகழ்ச்சியில் வியட்நாம் குழுவின் பங்கேற்பிற்கு முதல்வர் யோகி சிறப்பு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் வியட்நாமைப் பாராட்டியதுடன், தூதரை சந்தித்தபோதும் வியட்நாமின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவித்தார். வியட்நாம் பிரதிநிதிகளில் பாரம்பரிய கலைகளை நிகழ்த்துபவர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் புதன்கிழமை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தங்கள் கலையை வெளிப்படுத்தி உலக நாடுகளில் இருந்து வந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

click me!