உணவில் கலப்படம்.. சீரும் முதல்வர் யோகி ஆதித்யநாத் - உ.பி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!

By Asianetnews Tamil StoriesFirst Published Sep 24, 2024, 5:21 PM IST
Highlights

மனிதனின் வியர்வை மற்றும் அவர்கள் மூலம் வெளிப்படும் அழுக்குகள் பல உணவுப் பொருட்களில் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ (செப்.24): பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில், அதை தயாரிக்கும் அல்லது பேக் செய்யும் மனிதர்களின் வியர்வை மற்றும் அழுக்கு கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்கள்/தாபாக்கள்/உணவகங்கள் போன்றவற்றை முழுமையாக விசாரணை, ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம் பொதுமக்களின் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தேவைக்கேற்ப விதிமுறைகளில் திருத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியக் கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய முக்கிய வழிகாட்டுதல்கள் இதோ:-

சமீப காலமாக, ஜூஸ், பருப்பு மற்றும் ரொட்டி போன்ற உணவுப் பொருட்களில் மனித வியர்வை/உண்ண முடியாத/அழுக்குப் பொருட்களைச் சேர்த்து கலப்படம் செய்யும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் கொடூரமானவை மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற இழிவான முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறினார்.

Latest Videos

உத்தரப் பிரதேசத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2024!

இதனால் தாபாக்கள்/உணவகங்கள் மற்றும் பிற உணவு நிறுவனங்களை ஆய்வு செய்வது அவசியம். மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி, நிர்வாகிகள் உட்பட அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் சரிபார்க்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டுக்குழு இந்த நடவடிக்கையை விரைவாக முடிக்க வேண்டும்.

உணவு நிறுவனங்களில் நிர்வாகிகள், உரிமையாளர்கள், மேலாளர்கள் போன்றோரின் பெயர் மற்றும் முகவரியை முக்கியமாகக் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்திலும் தேவைக்கேற்ப திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

தாபாக்கள்/ஹோட்டல்கள்/உணவகங்கள் போன்ற உணவு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அமரும் இடம் மட்டுமின்றி, பிற பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கடையின் நிர்வாகிகளும் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தேவைப்பட்டால் காவல்துறை/உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உணவகங்களில் தூய்மை இருக்க வேண்டும். உணவு தயாரிக்கும் போதும், பரிமாறும் போதும் சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் முகக்கவசம்/கையுறை அணிய வேண்டும், இதில் எந்தவிதமான அலட்சியமும் இருக்கக்கூடாது.

பொதுமக்களின் உடல்நல நலன்களில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. அவ்வாறு செய்ய முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தயாரித்தல், விற்பனை செய்தல் அல்லது பிற தொடர்புடைய செயல்பாடுகள் தொடர்பான விதிகள் நடைமுறையில் உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். விதிமீறல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் பிளான்.! யோகி அரசின் அதிரடி திட்டம்!

click me!