அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த PPP பாலிசி! புது ரூட்டில் போகும் யோகி ஆதித்யநாத்!

Published : Nov 20, 2024, 01:50 PM ISTUpdated : Nov 20, 2024, 01:51 PM IST
அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த PPP பாலிசி! புது ரூட்டில் போகும் யோகி ஆதித்யநாத்!

சுருக்கம்

உ.பி.யில் தனியார் பங்கெடுப்புடன் செயல்படுத்தப்படும் PPP திட்டங்களை ஊக்குவிக்க, புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி இருக்கிறார்.

PPP திட்டங்களுக்கு தனியார் துறையிடமிருந்து கிடைத்த ஊக்கமளிக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்திற்காக மாநிலத்தின் PPP கொள்கையை மேலும் எளிமையாக்கவும், ஒழுங்குபடுத்தவும் வேண்டும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாயன்று நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டத்தில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உலக முதலீட்டாளர்கள் மாநாடு-23 இல் பெறப்பட்ட மொத்த முதலீட்டு முன்மொழிவுகளில் சுமார் 10% PPP திட்டங்களுக்கானவை. இது நமது சிறந்த கொள்கையின் பலனைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்துக் கூறுகளையும் சிறப்பாகக் கையாளும் ஒரு கொள்கை தேவை என்ற அவர், PPP-க்கு ஏற்ற திட்டங்களைக் கண்டறிதல், பங்குதாரர்களின் ஆலோசனை, டெவலப்பருக்கான ஏலம் தயாரித்தல், கொள்முதல் செயல்முறை நிலை, ஒப்பந்தம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும்.

இந்த நோக்கத்தோடு, விரைவில் மாநிலத்தின் புதிய PPP கொள்கை உருவாக்கப்படும். இன்வெஸ்ட் உ.பி. திட்டத்தின் கீழ் ஒரு பிரத்யேகமான PPP பிரிவு அமைக்கப்பட வேண்டும். இது PPP கட்டமைப்பை உருவாக்குவதல், துறைகளுக்கு ஆலோசனை வழங்குதல், தனியார் முதலீட்டை அரசுத் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல், துறைசார் ஒத்துழைப்பை எளிதாக்குதல், திட்டச் செயல்பாட்டைச் சீராக்குதல் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
LPG Scam Alert: Indane & HP Gas Alert: ஆன்லைன் கேஸ் புக்கிங்கில் நடக்கும் நூதன மோசடிகள்..!