நெல் கொள்முதல்.. 4,000 மையங்களை அமைக்கும் யோகி அரசு - விவசாயிகளுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

By Ansgar RFirst Published Sep 30, 2024, 5:15 PM IST
Highlights

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் அக்டோபர் 1 முதல் நெல் கொள்முதலைத் தொடங்குகிறது யோகி ஆதித்யநாத் அரசு. 4,000 கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் நாளை அக்டோபர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதலைத் தொடங்க உள்ளது. ஹர்தோய், லக்கிம்பூர் கேரி மற்றும் சீதாபூர் போன்ற மாவட்டங்களில் கொள்முதல் செயல்முறை தொடங்கி, லக்னோ பிரிவில் உள்ள லக்னோ, ரே பரேலி மற்றும் உன்னாவ் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு நவம்பர் 1 வரை இந்த கொள்முதல் நடைபெறும். 

மேலும் இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில், மாநில அரசு 4,000 நெல் கொள்முதல் மையங்களை அமைத்துள்ளது. உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல் துறை செயல்பாடுகளையும் அரசு மேற்பார்வையிடுகிறது. விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்கும் வகையில், கொள்முதல் செய்த 48 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு பணம் அனுப்பப்படும். 

Latest Videos

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 36 கோடி மரக்கன்றுகளை நட்டு யோகி அரசு சாதனை

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குவிண்டாலுக்கு ரூ.2,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தரம் A நெலிற்கு குவிண்டாலுக்கு ரூ.2,320க்கு வாங்கப்படும். நெல்லை இறக்குதல், சலித்தல் மற்றும் சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்காக விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.20 கூடுதலாக வழங்கப்படும்.

செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய பதிவுப் பணியைத் தொடர்ந்து, செப்டம்பர் 30 வரை, சுமார் 32,000 விவசாயிகள் கொள்முதல் செயல்முறைக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவசாயிகள் உத்தரப் பிரதேசம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள் மற்றும் மாநிலத்தின் முயற்சியால் பயனடைய ஆர்வமாக உள்ளனர். மீரட், சஹாரன்பூர், மொராதாபாத், பரேலி, ஆக்ரா, அலிகர் மற்றும் ஜான்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஜனவரி 31, 2024 வரை கொள்முதல் செயல்முறை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-25 காரீஃப் பருவத்திற்கான நெல் சாகுபடி பரப்பு 61.24 லட்சம் ஹெக்டேர் என்றும், 265.54 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநில வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது. சராசரி மகசூல் ஹெக்டேருக்கு சுமார் 43.36 குவிண்டால் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது மாநிலத்தின் விவசாய உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

வெளிநாட்டினரை ஈர்த்த உபி சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024.. இந்தியர்கள் உற்சாகம்!

click me!