மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் முதல் அமிர்தானந்தமயி சந்திப்பு வரை.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விசிட்

Published : Jul 08, 2023, 11:57 PM IST
மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் முதல் அமிர்தானந்தமயி சந்திப்பு வரை..  மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விசிட்

சுருக்கம்

கேரளா சென்ற மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டம் அமிர்தபுரியில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உள்ள வர்கலாவில் உள்ள துறவி-சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற சிவகிரி மடம் உள்ளது. இங்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (ஜூலை 8) சென்று மாதா அமிர்ந்தானந்தா மயி அவர்களுடன் கலந்துரையாடினார்.

தனது கேரளப் பயணத்தின் முதல் நாளில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் நினைவுச் சொற்பொழிவின் தொடக்க உரையிலும் உரையாற்றினார். அதேபோல, சிவகிரி மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு மகா சமாதி மந்திரத்தில் மரியாதை செலுத்தினார்.

பிறகு அமைப்பின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான குருவின் ஆதரவாளர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். பிறகு பேசிய அவர், "குருதேவ சமாதிக்கு வருகை உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டது மற்றும் ஊக்கமளிக்கிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சராகப் பதவியேற்ற பிறகு சிவகிரி மடத்துக்கு எனது முதல் வருகை இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய அரசும் எப்போதும் மடத்துக்கும், சமுதாயத்தை அறிவூட்டும் முயற்சிகளுக்கும் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்” என்றார்.

பிறகு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அமிர்தபுரியில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்துக்குச் சென்று அங்கு அமிர்தானந்தமயியைச் சந்தித்தார். புதிய இந்தியாவை வடிவமைப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மையத்தின் முன்முயற்சிகள் குறித்து விரிவாகப் பேசினார்.

     
சந்தீப் உன்னிகிருஷ்ணன் நினைவு சொற்பொழிவை ஆற்றினார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். அவர் பேசும் போது, "மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனைப் பற்றி நினைக்கும் போது, அவர் நம்மை ஊக்குவிக்கும் மதிப்புகள் நினைவுக்கு வருகின்றன. இந்த மதிப்புகள் எப்படியோ நச்சு அரசியல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்தியில் நீர்த்துப்போகின்றன. அவரைப் போன்ற போர்வீரர்கள் நோக்கத்துடன் வாழ்ந்தனர்.

அது அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தியது. அவரது நோக்கம் சேவை, ஒருமைப்பாடு மற்றும் இந்தியாவின் யோசனைக்கு அர்ப்பணிப்பு" என்று அவர் கூறினார். வரலாறு முழுவதும் இந்திய வீரர்கள் செய்த தியாகங்களை அங்கீகரித்து, போர் நினைவுச் சின்னங்களை அமைப்பது குறித்தும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், நன்றியுணர்வுடன் கடந்த ஒன்பது வருடங்களாக நமது பிரதமரின் தலைமையில், நாடு முழுவதும் பல போர் நினைவுச்சின்னங்களை நாங்கள் கட்டியுள்ளோம். இது நமது ராணுவ வீரர்களின் உண்மையான தியாகத்தை வழிபடும் வழிபாட்டுத் தலம்” என்று கூறினார். தனது பயணத்தின் போது, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பல மாநில பாஜக தலைவர்களுடனும் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா.? இனி இந்த 15 விஷயங்களை செய்ய முடியாது - முழு விபரம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!