மாவோயிஸ்ட்களால் பழங்குடி மக்கள் 94 பேர் படுகொலை...!!!

Asianet News Tamil  
Published : Jul 27, 2017, 07:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
மாவோயிஸ்ட்களால் பழங்குடி மக்கள் 94 பேர் படுகொலை...!!!

சுருக்கம்

Union Home Minister Hansraj Azhar has claimed that Maoists have killed 94 people in the last 6 months alone.

கடந்த 6 மாதத்தி்ல் மட்டும் மலைவாழ் மக்கள் 94 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகீர் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில் தங்கி தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி மலைவாழ் மக்களை அவர்கள் படுகொலை செய்துவருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகீர் கூறியதாவது-

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 94 மலைவாழ் மக்களை படுகொலை செய்துள்ளனர். போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி அவர்கள் இந்த படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த படுகொலை நடத்துவதற்கு முன்னதாக அவர்களை சித்தரவதை செய்கின்றனர். அடித்தல், கத்தியால் குத்தி காயப்படுத்துதல் போன்ற சித்தரவதைகளை செய்கின்றனர். இவ்வாறு அவர் அந்த தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் தேசிய தலைவரானார் 46 வயது இளம் தலைவர்.. பீகார் டூ டெல்லி.. யார் இந்த நிதின் நபின்?
திடீர் சிக்கலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... மோடியை பார்க்க ஓடோடி வந்த யுஏஇ அதிபர்..! பகீர் பின்னணி..!