மத்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் வெளிநாட்டு நிதியுதவி உரிமம் ரத்து!

Published : Jan 17, 2024, 04:57 PM IST
மத்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் வெளிநாட்டு நிதியுதவி உரிமம் ரத்து!

சுருக்கம்

கொள்கை ஆராய்ச்சி மையமான பொது சிந்தனை குழுவின் வெளிநாட்டு நிதியுதவி உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

சட்டங்களை மீறியதாகக் கூறப்படும், கொள்கை ஆராய்ச்சி மையத்தினுடைய (Centre for Policy Research) பொது சிந்தனை குழுவின் வெளிநாட்டு நிதியளிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திற்கான (FCRA) பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், கொள்கை ஆராய்ச்சி மையமான பொது சிந்தனை மையத்தின் பதிவானது ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய ஆய்வுக்குப் பிறகு இந்த சிந்தனைக் குழுவினை அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

இந்தியாவின் முன்னணி பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவில், 197ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் சிந்தனை குழுவும் ஒன்றாகும். உயர்தர கல்வி உதவித்தொகை, சிறந்த கொள்கைகள் மற்றும் இந்தியாவில் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றிய வலுவான பொது உரையாடலுக்கு பங்களிக்கும் ஆராய்ச்சியை நடத்துவதற்காக செயல்படும் இலாப நோக்கற்ற, பாரபட்சமற்ற, சுயாதீனமான நிறுவனமாகும்.

Centre for Policy Research எனும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் நன்கொடையாளர்களில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, ஹெவ்லெட் அறக்கட்டளை, உலக வங்கி, ஃபோர்டு அறக்கட்டளை, பிரவுன் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மறைந்த ஒய்.வி.சந்திரசூட் மற்றும் மூத்த பத்திரிகையாளர் மறைந்த பி.ஜி.வர்கீஸ் ஆகியோர் Centre for Policy Research எனும் கொள்கை ஆராய்ச்சி மைய குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர்.

தனது இடைநீக்கத்தை எதிர்த்து கொள்கை ஆராய்ச்சி மையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, நாட்டின் பொருளாதார நலனைப் பாதிக்கக்கூடிய விரும்பத்தகாத நோக்கங்களுக்காக வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறுவதால் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் வெளிநாட்டு நிதியை நிறுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வாதிட்டது.

பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு: அண்ணாமலை வலியுறுத்தல்!

கொள்கை ஆராய்ச்சி மையம் தனது வெளிநாட்டு பங்களிப்புகளை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியதாகவும், வெளிநாட்டு நிதியளிப்பு சட்டங்களை மீறி பங்களிப்புகளை நியமிக்கப்படாத கணக்குகளில் டெபாசிட் செய்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!