நாளை தேசிய கட்சி தொடங்குகிறார் சந்திரசேகர் ராவ்… மக்களுக்கு மதுபாட்டில் மற்றும் கோழி கொடுத்து அசத்தல்!!

By Narendran SFirst Published Oct 4, 2022, 4:41 PM IST
Highlights

சந்திரசேகர் ராவ் நாளை தேசிய கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்புக்கு முன்னதாக, வாரங்கலில் உள்ளூர் மக்களுக்கு டிஆர்எஸ் தலைவர் ராஜனாலா ஸ்ரீஹரி மதுபாட்டில்கள் மற்றும் கோழிகளை வழங்கினார். 

சந்திரசேகர் ராவ் நாளை தேசிய கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்புக்கு முன்னதாக, வாரங்கலில் உள்ளூர் மக்களுக்கு டிஆர்எஸ் தலைவர் ராஜனாலா ஸ்ரீஹரி மதுபாட்டில்கள் மற்றும் கோழிகளை வழங்கினார். டிஆர்எஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 5 ஆம் தேதி தசரா அன்று தெலுங்கானா பவனில் நடைபெறும் என்று சந்திரசேகர ராவ் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. வெளியீட்டில் நிகழ்ச்சி நிரல் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும், டிஆர்எஸ் தலைவர், தேசிய அரசியலை நோக்கி தனது அணுகுமுறையின் விவரங்களை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “இனி 1 மணி நேரத்துக்கு முன்னாடியே போகலாம்.. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு !”

மேலும் அது குறித்து தனது கட்சியின் தரப்புடன் விவாதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் விவரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயரை மாற்றலாம். மறுபெயரிடப்பட்ட அமைப்பை உடனடியாக ஒரு தேசிய கட்சியாக அறிவிக்க முடியாது என்று ஆதாரங்கள் முன்பு சுட்டிக்காட்டியிருந்தன.

இதையும் படிங்க: 500 நாட்கள்; 25ஆயிரம் மொபைல் டவர்; ரூ.26,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரச ஒப்புதல்

தெலுங்கானாவில் விவசாயிகளுக்கான 'ரிது பந்து' முதலீட்டு ஆதரவுத் திட்டம் மற்றும் தலித் பந்து (ஒவ்வொரு தலித் குடும்பத்திற்கும் எந்தவொரு தொழில் அல்லது வர்த்தகத்தையும் தொடங்க ரூ. 10 லட்சம் மானியம்) போன்ற நலத்திட்டங்களை கட்சி முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் ஏன் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

click me!