#Unmaskingchina சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட பாலம்... இந்திய அதிகாரிகள் அசத்தல்..!

Published : Jun 30, 2020, 11:28 AM IST
#Unmaskingchina சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட பாலம்... இந்திய அதிகாரிகள் அசத்தல்..!

சுருக்கம்

உத்தராகண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் இடிந்து போன பாலத்தை மீண்டும் ஐந்தே நாட்களில் கட்டி முடித்துள்ளது எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு. தற்போது இந்த பாலம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

உத்தராகண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் இடிந்து போன பாலத்தை மீண்டும் ஐந்தே நாட்களில் கட்டி முடித்துள்ளது எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு. தற்போது இந்த பாலம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
 
சீன எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த பாலம் முன்ஸ்யாரி –மிலம் செல்லும்  வழியில் அமைந்துள்ளது. கடந்த 22ஆம் தேதி கனரக லாரி ஒன்று பொருளுடன் இந்த பாலத்தை கடக்க முயன்ற போது  அதிக எடையால் இந்தப்பாலம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ’’பொதுவாக இத்தகைய பாலங்களை கட்ட ஒரு மாத காலம் ஆகலாம். ஆனால், இது எல்லையோரம் அமைந்துள்ள முக்கியமான வழித்தடம் என்பதால் விரைந்த கட்டி முடித்தோம்’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த பாலம் தற்போது முன்பு இருந்ததை விட இரட்டிப்பு வலிமை மற்றும் சுமை தாங்கும் திறனுடன் கட்டப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட Air India.. இலவச ரீ ஷெட்யூல், டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு முழு பணம் ரிட்டன்
பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்.. பாஜக அழுத்தமா? பரபரப்பு தகவல்!