தொடரும் பயங்கரவாதிகள் அட்டகாசம் – 3 இந்திய வீரர்கள் பலி..!!

First Published Nov 29, 2016, 3:14 PM IST
Highlights


ஜம்மு அருகே உள்ள நக்ரோடா என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாம் மீது இன்று அதிகாலையில் திடீரென பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் திடீர் நடத்தியுள்ளனர். 

இதனைதொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.  இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் இந்திய வீரர்கள் 3 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

click me!