கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் மீது சந்தேகம்... மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அதிரடி!!

Published : Jun 13, 2022, 08:31 PM IST
கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் மீது சந்தேகம்... மத்திய இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் அதிரடி!!

சுருக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் வெளியாகும் தகவல்கள் கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

தங்கக் கடத்தல் வழக்கில் வெளியாகும் தகவல்கள் கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு பெட்டிகளில் சுமார் 30 கிலோ கடத்தல் தங்கம் இருந்துள்ளது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டார்.

இதில் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஜாமீனில் உள்ளனர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் அண்மையில் கூறியிருந்தார். அதன்படி, பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில், தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களைக் குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.

சரித்குமாரை போலீஸ் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என்று ஷாஜ் கிரண் கூறினார். அதேபோல நடந்தது. என்னுடைய வக்கீல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்றார். அதுவும் நடந்துள்ளது. என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னைக் கொன்று விடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என தெரிவித்தார். இந்த நிலையில் கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் வெளியாகும் தகவல்களால் கேரள முதல்வர், குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுவதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், 2020 ஆம் ஆண்டு தங்கக் கடத்தல் ஊழல் அம்பலமானதும், கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதன் பிறகு விசாரணையை அம்மாநில அரசு முடக்கியது. சமீபத்திய இந்த வழக்கு குறித்து வெளியாகும் தகவல்கள்  அம்மாநில முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!