அயோத்தி ராமருக்கு 5000 அமெரிக்க வைரக் கற்களுடன் தயாரான பிரம்மாண்ட நெக்லஸ்; இணையத்தில் வைரல்!!

Published : Dec 19, 2023, 10:47 AM IST
அயோத்தி ராமருக்கு 5000 அமெரிக்க வைரக் கற்களுடன் தயாரான பிரம்மாண்ட நெக்லஸ்; இணையத்தில் வைரல்!!

சுருக்கம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024, ஜனவரி 22ஆம் தேதி நடக்கிறது.

அயோத்தி ராமர் கோவில் முதல் கட்டப் பணிகள் விரைவில் முடிந்து கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். பல்வேறு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையம், தங்கும் விடுதிகள் என்று பல்வேறு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ராமர் கோவிலுக்கு சிறப்பு வைர நெக்லஸ் தயாரித்துள்ளார்.

இந்த நெக்லஸ் 5000 அமெரிக்க வைரக் கற்கள், இரண்டு கிலோ வெள்ளியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லசை மொத்தம் 40 கலைஞர்கள், 35 நாட்களில் செய்து முடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நெக்லஸ் கோவில் வடிவத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாமக்கலைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 42 பெல்கள் தயாரித்துள்ளார். மேலும், பெங்களூரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் 48 பெல்கள் செய்வதற்கு ஆர்டர் கொடுத்து உள்ளார் என்றும் 42 பெல்கள் மட்டும் 1,200 கிலோ எடை கொண்டது என்று தெரிய வந்துள்ளது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இந்த பெல்கள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவிலுக்கு மொத்தம் 108 பெல்கள் தேவை என்று தெரிய வந்துள்ளது.

முன்னக்கூட்டியே, ஜனவரி 16ஆம் தேதி சிறப்பு வேத பூஜைகள் கோவிலில் நடைபெற இருக்கிறது. கோவில் நிர்வாகம் 4.40 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா மையம் ஒன்றை கட்டுவதற்கு தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர், மறுநாள் 23ஆம் தேதி பக்தர்களுக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!
திருப்பதியில் ரூ.54 கோடி சால்வை மோசடி! பட்டுக்கு பதில் பாலியஸ்டரை கொடுத்தது அம்பலம்!