
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொலை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. டெல்லி நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. முகேஷ், பவான் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.