தமிழ் பாடல்கள் ஒலித்த ஸ்பீக்கரை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர் - தமிழர்கள் மீதும் தாக்குதல் .. பெங்களூருவில் பதற்றம் ..

Published : Aug 21, 2019, 06:38 PM ISTUpdated : Aug 21, 2019, 06:39 PM IST
தமிழ் பாடல்கள் ஒலித்த ஸ்பீக்கரை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர் - தமிழர்கள் மீதும் தாக்குதல் .. பெங்களூருவில் பதற்றம் ..

சுருக்கம்

பெங்களூரு நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் ஒலித்த ஸ்பீக்கரை கன்னட அமைப்பினர் உடைத்ததோடு தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் .

பெங்களூருவில் இருக்கும் ஜேஜே நகரில் உள்ள மார்க்கண்டேய பகுதியில் கங்கம்மாதேசி உற்சவம் நடைபெற்றது . இந்த விழாவை அங்குள்ள தமிழர்கள் சேர்ந்து நடத்தியுள்ளனர் . இதற்காக காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கின்றனர்  .

நிகழ்ச்சி நடந்த அன்று தமிழ் பாடல்களை அங்கு  ஒலிக்க செய்துள்ளனர் . அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த கர்நாடக ரஷன அமைப்பினர் சிலர் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் புகுந்து கலாட்டா செய்துள்ளனர் . அங்கிருந்த ஸ்பீக்கரை அடித்து நொறுக்கியதுடன் தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்  .

இந்த சம்பவம் குறித்து காவல்துறை 5 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது . எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது . இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்த்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர் .

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!