போர் பதற்ற சூழலில் இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !! .. புதுமண தம்பதிக்கு குவியும் பாராட்டு மழை .. .

Published : Aug 21, 2019, 05:28 PM ISTUpdated : Aug 21, 2019, 05:37 PM IST
போர் பதற்ற சூழலில் இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !!  .. புதுமண தம்பதிக்கு குவியும் பாராட்டு மழை .. .

சுருக்கம்

இந்திய பெண் ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி திருமணம் செய்து கொண்டுள்ளார் . அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துச் செய்தி வந்த வண்ணம் இருக்கிறது .

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி . இவருக்கும் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷாமியா அர்சூவிற்கும்(26) துபாயில் வைத்து பழக்கம் ஏற்பட்டு  இருக்கிறது . ஷாமியா எமிரேட்ஸ் நிறுவனத்தில் விமான பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் டெல்லியில் வசித்து வருகின்றனர்.

இருவருக்குமான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது . இரு வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவே திருமண ஏற்பாடுகள் தொடங்கின . அதன்படி இருவருக்கும் திருமணம் நேற்று துபாயில் வைத்து நடைபெற்றது . இந்த திருமணத்திற்கு பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் . எனினும் இரு நாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவில்லை .

இந்த புதுமண தம்பதிகளுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்தி ட்விட் செய்துள்ளார் . மேலும் சமூக வலைத்தளங்களில் இவர்களின் திருமண புகைப் படம் வைரலாகி வருகிறது .

இந்த திருமணம் மூலம்  இந்தியாவைச் சேர்ந்த பெண்ணை மணம் முடிக்கும் 4வது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை ஹசன் அலி பெற்றுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சம்பள கணக்குல இவ்வளவு பலன்களா? மத்திய அரசு ஊழியர்கள் இனி ராஜாதான்.. நிதி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!
நாட்டையே உலுக்கிய சம்பவம்... அவதூறு பரப்பிய பெண்; அவமானத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தீபக்