பாம்பு விஷத்தையும் விட்டு வைக்காத கடத்தல்காரர்கள் - 4 பேர் கைது

 
Published : Oct 17, 2016, 12:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
பாம்பு விஷத்தையும் விட்டு வைக்காத கடத்தல்காரர்கள் - 4 பேர் கைது

சுருக்கம்

மேற்கு வங்க மாநிலத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். 

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில், பாம்பு விஷம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்‍கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட அவர்கள், அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்‍கும் வகையில் சென்ற 4 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த 250 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பாம்பு விஷம் கடத்தப்படவிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"