அரசியலுக்கு குட்பை சொன்ன சஞ்சய் ராவத்! உடனே வாழ்த்து சொன்ன மோடி!

Published : Oct 31, 2025, 07:04 PM IST
Sanjay Raut - Narendra Modi

சுருக்கம்

சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தீவிர உடல்நலக் குறைவு காரணமாகப் பொது வாழ்வில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் (Sanjay Raut), தீவிர உடல்நலக் குறைவு காரணமாகத் தற்காலிகமாகப் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அறிவித்துள்ளார்.

தனது உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளதாகவும், அதற்கான சிகிச்சை நடந்து வருவதாகவும் சஞ்சய் ராவத், தனது ஆதரவாளர்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கடிதத்தின் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் அனைவரும் எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்து அன்பு காட்டியுள்ளீர்கள், அதற்கு நான் நன்றியுள்ளவன். இருப்பினும், சமீப காலமாக எனக்குச் சில தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சிகிச்சை நடைபெற்று வருகிறது, நான் விரைவில் குணமடைந்து திரும்புவேன்," என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிலையில், வெளியே செல்ல வேண்டாம் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தனக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ ஆலோசனைப்படி ஓய்வு

"மருத்துவ ஆலோசனையின்படி, இப்போதைக்கு நான் ஓய்வெடுக்கவும், பொது நிகழ்ச்சிகள் அல்லது கூட்டங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளேன். இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு நான் வருந்துகிறேன்," என்று ராவத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

விரைவில் முழுமையாகக் குணமடைந்து, மீண்டும் சுறுசுறுப்பான அரசியல் வாழ்க்கைக்குத் திரும்புவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

பிரதமர் மோடி வாழ்த்து

சஞ்சய் ராவத்தின் சமூக ஊடகப் பதிவைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு விரைவில் உடல்நலம் தேற வாழ்த்துத் தெரிவித்தார்.

"சஞ்சய் ராவத் ஜி, நீங்கள் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்," என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சஞ்சய் ராவத் யார்?

மகாராஷ்டிரா அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ்) அணியின் முக்கிய முகமாக சஞ்சய் ராவத் திகழ்கிறார். இவர் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சிப்பதில் பெயர் பெற்றவர்.

இவர் பல தசாப்தங்களாக மகாராஷ்டிர அரசியலில் தீவிரமாக உள்ளார். சிவசேனாவின் நிறுவனரான பால் தாக்கரே தொடங்கிய மராத்தி நாளிதழான 'சாம்னா'வின் (Saamana) நிர்வாக ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா நடுநிலையான நாடு அல்ல.. அமைதி தான் முக்கியம்.. புடினிடம் உறுதியாகக் கூறிய மோடி!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!