ஒருத்தர் கூட சன்னிதானத்துக்கு உள்ளே நுழைய முடியாது...! வூடுகட்டி அடிக்கும் தந்திரிகள்!

By vinoth kumarFirst Published Oct 19, 2018, 10:46 AM IST
Highlights

கிட்டத்தட்ட ஒரு பெரும்போர்க்களம் போலவே மாறிவருகிறது சபரிமலை சன்னிதானம். பக்தர்கள், பூசாரிகள், தந்திரிகள் என்கிற பல ரூபங்களில் நடமாடும் ஐயப்ப விசுவாசிகள், விவாகரம் தங்களுக்கு சாதகமாக மாறும்வரை ஒரு ஈ,காக்காயைக்கூட உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார்களாம்.

கிட்டத்தட்ட ஒரு பெரும்போர்க்களம் போலவே மாறிவருகிறது சபரிமலை சன்னிதானம். பக்தர்கள், பூசாரிகள், தந்திரிகள் என்கிற பல ரூபங்களில் நடமாடும் ஐயப்ப விசுவாசிகள், விவாகரம் தங்களுக்கு சாதகமாக மாறும்வரை ஒரு ஈ,காக்காயைக்கூட உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார்களாம். 

நிலக்கல், பம்பை நதி, பதினெட்டாம்படி என்று வரிசையாக குவிந்திருக்கும் இவர்கள் ஆட்கள் உள்ளே நுழையாமல் இருக்க, மிரட்டல் விடுப்பதில் தொடங்கி காலில் விழுந்து கெஞ்சுவது வரை சகல தந்திரங்களையும் கையாள்கிறார்கள். 

பக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை. ஐயப்ப சன்னிதானம் கலவர பூமியாக மாற நாங்கல் விரும்பவில்லை’ என்று காவல்துறை மீண்டும் மீண்டும் அறிவித்துவரும் நிலையில் தங்களுக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் காட்டி, கோயிலுக்குள் யாரும் நுழைந்துவிடாதபடி வூடுகட்டிக் காக்கிறார்களாம் இந்த தந்திரிகள்.

click me!