இந்தியாவுக்கு எதிராக போலி கதைகளை பரப்பும் கும்பல் - ஆதாரத்துடன் விளக்கும் வீடியோ

By Ramya sFirst Published Jul 21, 2023, 11:51 AM IST
Highlights

இந்தியாவிற்கு எதிராக போலியான கதைகளை பரப்புவதற்கு ஒரு அமைப்பு அல்லது ஒரு கும்பல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நியூ இந்தியா ஜங்ஷன் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியாகும் வீடியோக்கள் தெளிவாக சுட்டுக்காட்டுகிறது

இந்தியாவிற்கு எதிராக போலியான கதைகளை பரப்புவதற்கு ஒரு அமைப்பு அல்லது ஒரு கும்பல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நியூ இந்தியா ஜங்ஷன் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியாகும் வீடியோக்கள் தெளிவாக சுட்டுக்காட்டுகிறது. அந்த பதிவில் “ இவர்கள் ஒன்றாக சேர்ந்து பொய்யான பிரச்சினைகளை எழுப்பி, உண்மை வெளிவரும்போது அமைதியாகி விடுகின்றனர். பின்னர் அவர்கள் வேறு சில போலியான பிரச்சினையை எழுப்புகிறார்கள். இதன் மூலம் இந்தியாவின் பெயரை கெடுக்கிறார்கள்.” என்று தெரிவிக்கப்படுள்ளது 

மேலும் இந்த வீடியோவில் பேசிய ரிச்சா அனிருத் “ பிபிசி ரெய்டு, பெகாசஸ் மற்றும் ரஃபேல் போன்ற விவகாரங்களில் பரப்பப்பட்ட பொய்யான கதையை அவர் விவாதிக்கிறார். நாட்டில் அடிப்படையற்ற பிரச்சினைகள் எவ்வாறு எழுப்பப்படுகின்றன என்பதை அவர் கூறியுள்ளார். மேலும் “ வெளிநாட்டு ஊடகங்கள், நிறுவனங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களின் ஒரு பகுதி மற்றும் ஊடகங்களைச் சேர்ந்த சில நபர்கள் உட்பட அமைப்பின் அனைத்து பகுதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சேர்ந்து சத்தம் போடத் தொடங்குகிறார்கள். உண்மை வெளிவரும்போது ஒட்டுமொத்த அமைப்பும் அமைதியாகிவிடும். ஆதாரமற்ற பிரச்சினையில் நாட்டின் நேரத்தை வீணடித்ததற்காக அவர் குற்ற உணர்ச்சியோ வெட்கமோ உணரவில்லை. இந்த லாபி மீண்டும் போலியான கதைகளை பரப்புவதில் ஈடுபட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார். 

Episode 04 with

Is there a pattern in manufactured fake narratives against India?

What happens when a fake narrative is debunked?

Which group or lobby is behind such ?

Watch the latest episode: https://t.co/OURdztTCUD pic.twitter.com/PuA23r5yF5

— New India Junction (@nijunction)

பிரதமர் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ‘INDIA’ எதிர்பார்க்கிறது - கார்கே ட்வீட்..

 

click me!