
ராமாயணத்தில் சீதையைக் கடத்தியது யார் என்று கேட்டால் ராவணன் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால், குஜராத்தில் 12 ஆம் வகுப்பு சமஸ்கிருத பாடத்தில் சீதையைக் கடத்தியது ராவணன் என்பதற்கு பதிலாக, ராமர் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு சமஸ்கிருத பாடத்தில் கவிஞர் காளிதாஸ், ரகுவம்சம் என்ற பகுதியில் 106-வது பக்கத்தில் கவிதை ஒன்று எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து குஜராத் மாநில பட்ளளி பாடநூல் கழக தலைவர் நிதின் பதேனி கூறும்போது, 12 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் ராமாயண பாடத்தில் தவறு ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
இதைச் சுட்டிக்காட்டும்போது அரசு ஏற்றுக்கொண்டு சரி செய்வதாக கூறுகிறது. ஆனால் இந்த தவறுகள் சாமானிய மக்களுக்குத் தெரிவதில்லை. ஒருவேளை சீதையைக் கடத்தியது ராமர்தான் என்று மாணவர்கள் படித்து உண்மை என்று நம்பியிருந்தால், வரலாற்றுப்பிழை ஏற்பட்டிருக்கும் என்றா