பேருந்து-டெம்போ மோதல்: விபத்தில் 12 பேர் பலி - காலையில் நடந்த துயர சம்பவம்

By Raghupati RFirst Published Oct 20, 2024, 9:59 AM IST
Highlights

இன்று காலையில் நெடுஞ்சாலையில் பேருந்தும் டெம்போவும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 8 குழந்தைகளும் அடங்குவர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் எட்டு குழந்தைகள் அடங்குவர். பெரும்பாலானவர்கள் ஐந்து முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள். குடும்பத்தினர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது பேருந்து ஒன்று டெம்போ மீது மோதியுள்ளது. இந்த சம்பவம் தோல்பூர் மாவட்டத்தின் பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.

பாடி காவல்துறையினர் கூறுகையில், நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து சுனிபூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 11பி-யில் சென்று கொண்டிருந்தது. டெம்போவும் அதே சாலையில் சென்று கொண்டிருந்தது. திடீரென இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது. பாடி நகரில் உள்ள கரீம் காலனியில் இருக்கும் கும்மட் பகுதியைச் சேர்ந்த நஹானு மற்றும் ஜாகிர் குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர். இரு குடும்பத்தினரும் பரௌலி கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. 

Latest Videos

விருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு, அனைவரும் டெம்போவில் ஏறி திரும்பிக்கொண்டிருந்தனர். டெம்போ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சுனிபூர் கிராமத்தில் சிறப்புப் பேருந்து ஒன்று டெம்போ மீது மோதியுள்ளது. காவல்துறையினரும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பாடி அரசு மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2025ல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயரும்.. எவ்வளவு தெரியுமா?

click me!