டிக்கெட் எடுக்கலான இவ்வளவு ரூபாய் அபராதமா ??? உஷார் மக்களே ..

By Asianet TamilFirst Published Aug 27, 2019, 12:49 PM IST
Highlights

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடம் வசூல் செய்த அபராத தொகை எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது .

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை சிலர் வாடிக்கையாக கொண்டிருப்பார்கள் . இதனால் டிக்கெட் பரிசோதகர்கள் ரயில் நிலையங்களில் சோதனை செய்து டிக்கெட் இல்லாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதிப்பது வழக்கம் .

இப்படி ரயில்வே துறை மூலமாக வசூலிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார் . அதற்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்து இருக்கிறது .

அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார்  ரூ.1,377 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ரயில்வே துறை . 2016-2017  ஆண்டில் ரூ.405 கோடியே 30 லட்சமும்  , 2017-2018-ம் ஆண்டில் ரூ.441 கோடியே 62 லட்சமும் , 2018-2019-ம் ஆண்டில் ரூ.530 கோடியே 6 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

2018 ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி வரையிலும் சுமார் 89 லட்சம் பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து அபராதம் செலுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது .

click me!