"இரண்டுமுறை தோற்று இறுதியில் வென்றிருக்கிறேன்" - வரலாற்றுச் சாதனையோடு தாயகம் திரும்பிய தங்க மங்கை பி.வி.சிந்து பேட்டி

Published : Aug 27, 2019, 11:35 AM IST
"இரண்டுமுறை தோற்று இறுதியில் வென்றிருக்கிறேன்" - வரலாற்றுச்  சாதனையோடு   தாயகம் திரும்பிய தங்க மங்கை பி.வி.சிந்து பேட்டி

சுருக்கம்

உலக பேட்மிட்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி சிந்து இந்தியா திரும்பினார் .  அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

உலக பேட்மிண்டன் போட்டி வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை இந்தியா இதுவரை வென்றதில்லை . அந்த வரலாற்று சாதனையை பி.வி.சிந்து நிகழ்த்தியிருக்கிறார் .
 
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி  இந்திய வீராங்கனை சிந்து தங்கப்பதக்கம் தட்டிச்சென்றார் . இதன் மூலம் இந்த போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமை அவரை சேர்ந்திருக்கிறது .

சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய பி.வி சிந்துவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை வரவேற்க நூற்றுக்கணக்கானோர் திரண்டனர் . அவர்களின் உற்சாக வாழ்த்து மழையில் நனைந்தபடி வந்தார் பி.வி.சிந்து .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்  இந்தியர் என்று கூறுவதில் பெருமை அடைவதாகவும்  பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார் . நாட்டுக்காக பல பதக்கங்களை வென்றிருப்பதை குறிப்பிட்ட அவர் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நெகிழ்ச்சியாக கூறினார். 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!