ராகுல் காந்தியின் H-Files: வாக்கு திருட்டு பற்றி வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

Published : Nov 10, 2025, 04:27 PM IST
Rahul Gandhi

சுருக்கம்

ஹரியானா 2024 தேர்தலில் ராகுல் காந்தி (Rahul Gandhi) சுமத்திய “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என இந்த கட்டுரை விவரிக்கிறது.

ஹரியானா 2024 சட்டசபைத் தேர்தலில் பெரும் “வாக்கு திருட்டு” நடந்ததாக ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம்சாட்டினார். ஆனால் உண்மைகள் வெளிப்பட்டபோது, ​​அவரது குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக சிதறி விழுந்தன என்று கூறலாம். “H-Files” என அவர் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் நன்கு திட்டமிட்டு தவறான தகவல் பிரச்சாரமாகவே மாறியுள்ளது.

முதலாவது குற்றச்சாட்டாக, ஒரு முதிய பெண்மணியின் பெயர் 220 முறை வாக்காளர் பட்டியலில் வந்ததாக ராகுல் கூறினார். ஆனால் அந்தப் பட்டியல் “முலானா” தொகுதியில் இருந்தது, அங்கு காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. உண்மையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் எண்ணிக்கை அதிகமானால் புதிய பூத் பிரிவுகளை உருவாக்குவது வழக்கம். இது சாதாரண நிர்வாக நடைமுறைதான், மோசடி அல்ல.

அடுத்ததாக, எக்சிட் போல் பற்றிய குற்றச்சாட்டு. இதுவரை ராகுல் காந்தி எக்சிட் போல்களை நம்பாதவர். ஆனால் சில எக்சிட் போல்கள் காங்கிரஸுக்கு சாதகமாக வந்தவுடன், அதையே “முக்கிய சான்று” என எடுத்துக் கொண்டார். வெற்றி தன் பக்கம் இருந்தால் நம்புவது, இல்லை என்றால் மறுப்பது, இதுவே ராகுலின் இரட்டை நிலைப்பாடு என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அதன்பின், தபால் வாக்கு குறித்து அவர் கூறியதெல்லாம் தவறான விளக்கம். ஹரியானாவில் தபால் வாக்குகள் மொத்த வாக்குகள் 0.57% மட்டுமே. இத்தனை சிறிய எண்ணிக்கையை கொண்டு பெரிய அளவிலான மோசடி நடந்தது எனச் சொல்லுவது தர்க்கரீதியற்றது ஆகும். பல இடங்களில் பாஜக தான் தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்து இறுதியில் தோற்றது என்பது பதிவாகியுள்ளது.

மேலும், ராகுல் காந்தி, முதல்வர் நயாப் சிங் சைனியின் பேச்சை துண்டித்து வெளியிட்டு “வாக்கு திருட்டு ஒப்புதல்” என வதந்தி பரப்பினார். ஆனால் முழு வீடியோவில் அவர் “தனியாக அரசு அமைக்கும் நம்பிக்கை” குறித்து கூறியிருந்தார் என்பது பிற்காலத்தில் உறுதியாகியது.

அதேபோல, “ஒரே பெண் 22 முறை வாக்களித்தார்” என்ற குற்றச்சாட்டும் முழுக்க புனைவு. பெயர் வேறுபாடு, குடியிருப்பு மாற்றம் போன்ற காரணங்களால் சில பெயர்கள் இருமுறை தோன்றலாம். தேர்தல் ஆணையம் அவற்றை திருத்துவது வழக்கம். இதற்கு எந்த சட்டபூர்வ புகாரும் காங்கிரஸால் செய்யப்படவில்லை.

இதில் மிகவும் வேடிக்கையானது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி “நகல் வாக்காளர் அடையாளம்” என காங்கிரஸ் காட்டியது. அந்த மாடல் தானே “எனக்கு இந்திய அரசியலோடு தொடர்பே இல்லை” என வெளிப்படையாக கூறியிருந்தார். இதுவே காங்கிரஸின் தவறான தகவல் பிரச்சாரத்தின் உச்சநிலை.

மொத்தத்தில், ராகுல் காந்தியின் “H-Files” என்பது உண்மைக்குப் புறம்பான நாடகம். எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் உண்மை ஆதாரம் இல்லை. தேர்தல் முறைகள் வெளிப்படையாகவும், சட்டப்படி நடந்தன. உண்மையில் நடந்தது “வாக்கு திருட்டு” அல்ல, உண்மையைக் களவாடும் நாடகம் தான் என்று கூறலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி