பிரதமர் மோடி சாதி சர்ச்சை.. OBC சமூகத்திடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் - தேசிய ஆணையம் கண்டனம்!

Ansgar R |  
Published : Feb 08, 2024, 10:07 PM IST
பிரதமர் மோடி சாதி சர்ச்சை.. OBC சமூகத்திடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் - தேசிய ஆணையம் கண்டனம்!

சுருக்கம்

Rahul Gandhi Must Apologise : திரு. ராகுல் காந்தி, ஓபிசி சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் நமது மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பேசியதால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஓபிசி மக்கள், ஸ்ரீ ராகுல் காந்தியின் இந்த நடத்தையைக் கண்டு கோபத்தில் கொதிப்படைந்துள்ளனர்.

அவர் ஒரு பொதுக்கூட்டத்தில், ​​பிரதமர் மோடியின் ஓபிசி அந்தஸ்து மற்றும் மோடி சார்ந்த ஜாதி பற்றி பேசியுள்ளார். ஆனால் அது குறித்த உண்மைகள் தெளிவாக உள்ளன. அதன்படி ஓபிசி பட்டியலில் 'மோத் காஞ்சி'யை சேர்ப்பதற்கான அறிவிப்பு குஜராத் அரசால் 25 ஜூலை 1994 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முன், குஜராத்தில் ஒரு கணக்கெடுப்புக்குப் பிறகு, மண்டல் கமிஷன் கூட குறியீட்டு 91 (A) இன் கீழ் OBC களின் பட்டியலைத் தயாரித்தது. அதில் மோத்-காஞ்சி சாதியை உள்ளடக்கியது.

ராஜ்யசபா எம்.பி.. முடிவடைந்த பதவிக்கலாம்.. சபையில் நெகிழ்ந்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் - வெளியிட்ட அறிக்கை!

குஜராத் மாநிலத்திற்கான OBCகளின் மத்திய பட்டியலில் 104 சாதிகள்/சமூகங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் 15.11.1997 அன்று மத்திய அரசுக்கு குஜராத் மாநிலத்தின் OBC களின் மத்தியப் பட்டியலில் மோத்-காஞ்சியைச் சேர்ப்பதற்கு ஆலோசனை வழங்கியது மற்றும் அதற்கான அரசிதழ் 27.10.1999 அன்று வெளியிடப்பட்டது. 

குஜராத் மாநிலத்திற்கான OBC-களின் மத்தியப் பட்டியலில் மோத்-காஞ்சியைச் சேர்ப்பதற்கான தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் அறிவுரை பொதுவாக மத்திய அரசைக் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டு முடிவுகளும் எடுக்கப்பட்டபோது, ​​நரேந்திர மோடி சட்டமன்ற அல்லது நிர்வாக பதவியை வகிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஓபிசிகள் மீதான வெறுப்பு, ராகுல் காந்திக்கு அவரது மூதாதையர்களிடமிருந்து கிடைத்ததைப் பார்க்கும்போது திகைப்பாக இருக்கிறது. பண்டித ஜவஹர்லால் நேருவின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அம்பலப்படுத்தினார். மண்டல் கமிஷனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி பேசியது அனைவரும் அறிந்ததே. 

சோனியாவும், ராகுல் காந்தியும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்தைக் கூட விரும்பவில்லை. மோடி அரசு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கியுள்ளது. இன்று, காங்கிரஸும் ஸ்ரீ ராகுல் காந்தியும் கோடிக்கணக்கான ஓபிசிகளை அவமானப்படுத்தி, பிரிவினைக்கு வித்திட முயற்சிக்கின்றனர்.

ஆகவே கோடிக்கணக்கான ஓபிசி சகோதரிகள் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து இதுபோன்ற அற்ப அரசியலை கண்டித்து, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறேம் என்று அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காசி தமிழ் சங்கமம் 4.0: தமிழக விவசாயிகளுக்கு வாரணாசியில் பிரமாண்ட வரவேற்பு
வந்தே மாதரம் சத்தத்தைக் கேட்டு காங்கிரஸ் ஏன் பயந்தது? நாடாளுமன்றத்தில் வரலாற்றை தோலுரித்த மோடி