
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருத்துகணிப்பு இன்று வெளியாகி உள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மனி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் ஆம் ஆத்மி, பாஜக - பிஎல்சி கூட்டணிகளும் களத்தில் உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பின் படி அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வாய்புள்ளது. ஆம்ஆத்மி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்துகணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.
ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
ஆம் ஆத்மி - 62 முதல் 70 இடங்கள்
காங்கிரஸ் - 23 முதல் 31 இடங்கள்
சிரோமணி அகாலிதளம் - 16 முதல் 24 இடங்கள்
பா.ஜ.க - 1 முதல் 3 இடங்கள்
ABP கருத்துக்கணிப்பு முடிவுகள் :
காங்கிரஸ் - 28
ஆம் ஆத்மி - 61
சி.அகாலிதளம் - 25
மற்றவை - 5
என்.டி.டி.வி கருத்துக்கணிப்பு முடிவுகள் :
ஆம் ஆத்மி - 68 இடங்கள்
காங்கிரஸ் - 27 இடங்கள்
சிரோமணி அகாலிதளம் - 17 இடங்கள்
பா.ஜ.க - 3 இடங்கள்
இந்திய டூடே கருத்துக்கணிப்பு முடிவுகள் :
காங்கிரஸ் - 31
ஆம் ஆத்மி - 90
சி.அகாலிதளம் - 11
பாஜக கூட்டணி - 4
மற்றவை - 2