மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பிரதமர் மோடி!

Published : Feb 04, 2025, 04:36 PM IST
மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பிரதமர் மோடி!

சுருக்கம்

PM Modi Visit Prayagraj to Take Holy dip at Kumbh Mela 2025 : பிரதமர் நரேந்திர மோடி, நாளை 5ஆம் தேதி புதன்கிழமை பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் புனித நீராட வருகை தர இருக்கிறார்.

PM Modi Visit Prayagraj to Take Holy dip at Kumbh Mela 2025 :மகா கும்பமேளா 2025: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா வரும் 26ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த கும்பமேளாவில் உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் என்று பிரபலங்களும் இந்த மகா கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியும் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் புனித நீராட இருக்கிறார். நாளை 5ஆம் தேதி புதன்கிழமை உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் மகா கும்பமேளாவிற்குச் சென்று, புனித திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம்) நீராட உள்ளார். பிரதமர் காலை 11 மணி முதல் 11:30 மணிக்குள் நீராட உள்ளார்.

லக்னோவில் முதல் இரவு நேர சஃபாரி! குக்ரையில் வனத்தில் புதிய திட்டம்!

மௌனி அமாவாசை நாளில் அரச குலா நீராடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நரேந்திர மோடியின் மகா கும்பமேளா பயணம் நடைபெறுகிறது. இந்த நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார். உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மகா கும்பமேளா 2025ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பூடான் மன்னர் புனித நீராடல்!

பிரதமர் நரேந்திர மோடியின் முழு பயணத்திட்டம்:

காலை 10:05 – நரேந்திர மோடி விமானப்படை விமானம் மூலம் பிரயாக்ராஜ் விமான நிலையம் வருகை.

காலை 10:10 – பிரயாக்ராஜ் விமான நிலையத்திலிருந்து டி.பி.எஸ் ஹெலிபேட் செல்வார்.

காலை 10:45 – பிரதமர் அரைல் படித்துறைக்கு வருகை.

காலை 10:50 – நரேந்திர மோடி அரைல் படித்துறையிலிருந்து படகு மூலம் மகா கும்பமேளாவுக்குச் செல்வார்.

கும்பமேளா வசந்த பஞ்சமியில் கிண்ணர் அகாடாவின் அற்புத அமிர்த ஸ்நானம்!

காலை 11:00 – 11:30 – நரேந்திர மோடி மகா கும்பமேளாவில் புனித நீராடல்.

காலை 11:45 – பிரதமர் படகு மூலம் அரைல் படித்துறை திரும்புவார். பின்னர் டி.பி.எஸ் ஹெலிபேட் சென்று, அங்கிருந்து பிரயாக்ராஜ் விமான நிலையம் திரும்புவார்.

மதியம் 12:30 – பிரதமர் விமானப்படை விமானம் மூலம் டெல்லி திரும்புவார்.

மகா கும்பத்தில் மூழ்கிய இந்தியா; உலகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!