Sudan Crisis: அவசர கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு; இந்தியர்களை மீட்க ஆலோசனை!!

Published : Apr 21, 2023, 01:28 PM ISTUpdated : Apr 21, 2023, 01:55 PM IST
Sudan Crisis: அவசர கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு; இந்தியர்களை மீட்க ஆலோசனை!!

சுருக்கம்

போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியுள்ளார். 

சூடான் நாட்டில் ராணுவத்தின் இரண்டு பிரிவினருக்கும் இடையே பெரிய அளவில் போர் நடந்து வருகிறது. அங்கு 4000த்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பது தொடர்பாக இன்று அவசர கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி இருக்கிறார்.

சூடானில் நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதாகவும் தெரிவித்து இருந்தது. இந்தியர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தது. 

இதுவரைக்கும் ராணுவத்தின் இரண்டு தரப்பிலும் நடந்த மோதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சூடான் நாட்டின் ராணுவம் மற்றும் விரைவு ஆதரவு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ரமலான் என்பதால் இன்றும், நாளையும் போர் நிறுத்தம் செய்துள்ளனர்.

Explained:சூடான் நாட்டின் சர்வாதிகாரி ஒழிந்தார்; அதிகார போதை ஒழிந்ததா? சூறையாடப்படும் ஏழை நாடு; காரணம் என்ன?

சூடான் தலைநகர் கார்டோம் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை அதிகமான நகரம். மேலும் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இங்கு வான்வழித் தாக்குதல்கள் மற்றும் டாங்குகள் மூலம் துப்பாக்கிச் சூடு போன்ற கடுமையான போர் நடந்து வந்தது. ஐந்து மில்லியன் மக்களில் பெரும்பாலானவர்கள் மின்சாரம், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் கடுமையான வெப்பத்தில் வீட்டில் தங்கியுள்ளனர். தகவல் தொடர்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. இஉண்ண உணவு இல்லை.

சூடானில் குடிக்க தண்ணீர் இல்லாமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள்: போர் நிறுத்தம் இதற்குத்தானா?

 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!