எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்து இருக்கிறீர்களா.? காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி

By Raghupati RFirst Published Feb 5, 2024, 7:00 PM IST
Highlights

இன்று பிரதமர் மோடி லோக்சபாவில் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக்சபாவில் தனது உரையின்போது, “காங்கிரஸ் கேன்சல் கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கிறது, மேக் இன் இந்தியா என்கிறோம், கேன்சல் என்கிறோம், ஆத்மநிர்பர் பாரத் என்கிறோம், காங்கிரஸ் கேன்சல் என்கிறோம், லோக்கல்ல குரல் கொடுப்போம், காங்கிரஸ் கேன்சல் என்கிறோம். எவ்வளவு நாள்தான் இவ்வளவு வெறுப்பை வளர்த்துக்கொண்டு இருப்பீர்கள்.

நாட்டின் சாதனையை கூட ரத்து செய்ய முயற்சிக்கிறார்களா?” பிரதமர் மோடி தற்போதைய மக்களவையில் தனது கடைசி உரையில் கூறினார். மேலும் காங்கிரஸை குறிவைத்து பேசிய பிரதமர் மோடி, அவர்கள் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததைப் போலவே, பல தசாப்தங்களாக எதிர்க்கட்சியாக இருப்போம் என்று சபதம் செய்ததாகத் தெரிகிறது.

Latest Videos

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..

"நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன். பல தசாப்தங்களாக இங்கு (கஜானா பெஞ்சுகளில்) அமர்ந்திருந்தீர்கள். ஆனால் இப்போது பல தசாப்தங்களாக அங்கேயே (எதிர்க்கட்சி பெஞ்ச்களில்) இருக்க முடிவு செய்துள்ளீர்கள். மக்கள் ஆசீர்வதிப்பார்கள். உங்களை அங்கேயே வைத்திருங்கள். நீங்கள் அதிக உயரங்களை அடைவீர்கள்” என்று அவர் கூறினார்.

மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!

click me!