பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பிரச்சனை.. பஞ்சாப் போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் - காரணம் "அந்த" சம்பவம் தான்!

Ansgar R |  
Published : Nov 26, 2023, 01:33 PM IST
பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பிரச்சனை.. பஞ்சாப் போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் - காரணம் "அந்த" சம்பவம் தான்!

சுருக்கம்

PM Modi : பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மொத்தம் 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு டிஎஸ்பி அந்தஸ்து அதிகாரிகள் அடங்குவர்.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது அவருடைய பாதுகாப்பில் சில குளறுபடிகள் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் முற்றுகையால் பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. 

பிஜேபி தலைவர்கள் அன்றைய சரண்ஜித் சிங் சன்னி அரசாங்கத்தை தோல்வி குறித்து குறிவைத்த நிலையில், பிரதமரின் பயணத் திட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக காங்கிரஸ் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, பாதுகாப்பு மீறலுக்கு பல மாநில அதிகாரிகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளது. 

Made In India.. இந்தியா மொபைல் துறையில் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளது - அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்த ரிப்போர்ட்!

இதனையடுத்து தற்போதைய பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, தவறு செய்ததற்காக ஏழு போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. குர்பிந்தர் சிங், ஃபெரோஸ்பூர் காவல்துறைத் தலைவராகவும், தற்போது பதிண்டா எஸ்பியாகவும் இருந்தவர். நவம்பர் 22 ஆம் தேதி உத்தரவில் மேலும் 6 காவலர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிஎஸ்பி ரேங்க் அதிகாரிகள் பார்சன் சிங் மற்றும் ஜகதீஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜதீந்தர் சிங் மற்றும் பல்விந்தர் சிங், சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாநில உள்துறை ஆணையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிகட்டத்தில் ஆதித்யா எல்1 விண்கலம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் சொன்ன முக்கிய அப்டேட்!

ஏழு காவலர்களும் பஞ்சாப் சிவில் சர்வீசஸ் (தண்டனை மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1970 விதி 8ன் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளின் கீழ் தண்டனைகள் பதவி உயர்வை நிறுத்தி வைப்பது முதல் பணியில் இருந்து நீக்குவது வரை இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!