பெட்ரோல் இன்று இரவுக்குள் போட்டுக்கங்க..!! நாளை......

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 06:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
பெட்ரோல் இன்று இரவுக்குள் போட்டுக்கங்க..!! நாளை......

சுருக்கம்

இன்று இரவுடன் ரூ. 500 பெட்ரோல் பங்குகளில் ஏற்பது முடிவடைகிறது. நாளையிலிருந்து புதிய ரூபாய் தாள்கள் மூலமே போட முடியும். ஆகவே முந்துங்கள் .

நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளிலும் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது

பெட்ரோல் பங்க்குகளில் வெள்ளிக்கிழமைக்குப் (டிச.2) பிறகு பழைய ரூ.500 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோன்று டிசம்பர் 3-ஆம் தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விமான டிக்கெட் வாங்க முடியாது என்றும் சுங்கச் சாவடி கட்டணம் செலுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வசதிக்காக பெட்ரோல் நிரப்பும் மையங்கள், சுங்கச் சாவடிகள், விமான டிக்கெட் முன்பதிவு மையங்கள் உள்ளிட்டவற்றில் பழைய ரூ.500 நோட்டுகளை வரும் 15-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி சிலர் தங்களிடமுள்ள கருப்புப் பணத்தை மாற்றி வருவதாகத் தெரிய வந்தது.

இந்நிலையில், அதற்கும் கடிவாளமிடும் நடவடிக்கையில் தற்போது மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன்படி பழைய ரூ.500 நோட்டுகளை முழுவதுமாக புழக்கத்திலிருந்து எடுக்கும் நடவடிக்கையாக அவற்றை இனி பெட்ரோல் பங்க்குகளிலும் செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 3-ஆம் தேதிக்கு மேல், ரூ.100, புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே நாட்டில் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதனால் இன்று இரவுக்குள் உங்கள் கையில் உள்ள பழை 500 ரூபாயில் பெட்ரோல் போட்டு கொள்ளுங்கள் . நாளைமுதல் புதிய கரன்சிகள் ,அல்லது கிரெடிட் , டெபிட் கார்டு மூலமே பெட்ரோல் போட முடியும். 

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?