முன்னாள் காதலியுடன் பழகியவரை கோடாரியால் வெட்டி கொலை - அதற்கு பெயர் லவ் ஜிகாத்தாம்...!

Asianet News Tamil  
Published : Dec 07, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
முன்னாள் காதலியுடன் பழகியவரை கோடாரியால் வெட்டி கொலை - அதற்கு பெயர் லவ் ஜிகாத்தாம்...!

சுருக்கம்

person was killed by some one in rajashtan about love jigath

தனது முன்னாள் காதலியுடன் பழகியதற்காக லவ் ஜிகாத் என்ற பெயரை சொல்லி வாலிபர் ஒருவரை கோடாரியால் வெட்டி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது பட்டா சேக் . இவர் ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்து வந்தார். 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட்  மாவட்டத்தில்  தேவ் ரோட்டில் உள்ள  ராஜ்நகரில்  முகமது பட்டா சேக்கை ஷம்பூநாத் ரைகேர் என்பவர்  கோடாரியால் வெட்டி கொலை செய்து  மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்தார். 

அதை வீடியோவாக எடுத்து  லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி  பதிவையும் வெளியிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வீடியோ குறித்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஷம்பூநாத் ரைகேர் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஷம்பூநாத்தின் முன்னாள் காதலியுடன்  முகமது பட்டா பழகி வந்ததாக கூறப்படுகிறது.  

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!