நல்லாட்சியில் இந்திய மக்கள் நம்பிக்கை: பிரதமர் மோடி!

By Manikanda PrabuFirst Published Dec 3, 2023, 4:59 PM IST
Highlights

இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டது. அம்மாநிலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி (நாளை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Latest Videos

அதன்படி, சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் 168 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 116 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 57 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்த மாநிலங்களில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருவதால், பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாக்கத்துறை புகார்!

இந்த நிலையில், இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என தேர்தல் முடிவுகள் குறித்து  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. பாஜகவின் மீது அவர்கல் நம்பிக்கை வைத்துள்ளனர்.” என பதிவிட்டுள்ளார்.

மேலும், பாஜக மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக, இந்த அனைத்து மாநிலங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் நமது இளம் வாக்காளர்கள் என அனைவருக்கும் நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மாநில நலனுக்காக நாங்கள் தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்றும் அவர்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

 

जनता-जनार्दन को नमन!

मध्य प्रदेश, राजस्थान और छत्तीसगढ़ के चुनाव परिणाम बता रहे हैं कि भारत की जनता का भरोसा सिर्फ और सिर्फ सुशासन और विकास की राजनीति में है, उनका भरोसा में है।

भाजपा पर अपना स्नेह, विश्वास और आशीर्वाद बरसाने के लिए मैं इन सभी राज्यों के परिवारजनों…

— Narendra Modi (@narendramodi)

 

“இத்தருணத்தில், உழைக்கும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. நீங்கள் அனைவரும் ஒரு அற்புதமான முன்மாதிரியை அமைத்துள்ளீர்கள். பாஜகவின் வளர்ச்சி மற்றும் மோசமான நலன்புரி கொள்கைகளை நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற விதத்தை போற்ற முடியாது. வளர்ந்த இந்தியா என்ற இலக்குடன் நாம் முன்னேறி வருகிறோம். நாம் நிறுத்தவோ சோர்வடையவோ வேண்டியதில்லை. இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இன்று நாம் இணைந்து இந்த திசையில் ஒரு வலுவான அடியை எடுத்துள்ளோம்.” எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

click me!