செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் - டெல்லியில் எதிர்க்கட்சியினர் திடீர் அலோசனை கூட்டம்

 
Published : Nov 24, 2016, 10:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் - டெல்லியில் எதிர்க்கட்சியினர் திடீர் அலோசனை கூட்டம்

சுருக்கம்

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

ரூபாய் நோட்டு விவாகரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் கடந்த 3 நாட்களாக பெரும் அமளி ஏற்பட்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இன்று 4வது நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தற்போது டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், பாஜ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கலந்து கொள்கின்றன.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!