பாகிஸ்தான் நடிகர்களை வெளியேற்றுவதால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது : அகிலேஷ் யாதவ்!

Asianet News Tamil  
Published : Oct 08, 2016, 05:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
பாகிஸ்தான் நடிகர்களை வெளியேற்றுவதால்  பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது : அகிலேஷ் யாதவ்!

சுருக்கம்

பாகிஸ்தான் நடிகர்களை வெளியேறச் சொல்வது தேவையற்ற ஒன்று என உத்திரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ்யாதவ் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது நல்ல நடவடிக்கைதான் என்றாலும், அது நிரந்தர தீர்வை தராது. ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண முடியும். பாகிஸ்தான் நடிகர்களை வெளியேறச் சொல்வது தேவையற்ற ஒன்று. கலையுலகை சேர்ந்தவர்களுக்கு சாதி, மதம் ஏதும் இல்லை என்றார்.

PREV
click me!

Recommended Stories

ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட Air India.. இலவச ரீ ஷெட்யூல், டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு முழு பணம் ரிட்டன்
பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்.. பாஜக அழுத்தமா? பரபரப்பு தகவல்!