போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களில் அத்துமீறிய பாகிஸ்தான்

Published : May 10, 2025, 09:17 PM ISTUpdated : May 10, 2025, 09:28 PM IST
போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களில் அத்துமீறிய பாகிஸ்தான்

சுருக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாகிஸ்தான் அதனை மீறி எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஸ்ரீநகரில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், பல மாவட்டங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பாகிஸ்தான் அதனை மீறியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்துகிறது.

ஸ்ரீநகர் முழுவதும் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பல எல்லை மாவட்டங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “போர் நிறுத்தம் என்ன ஆயிற்று? ஸ்ரீநகர் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்கின்றன!!!” என்று உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்:

பார்மரில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அவசர மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.  பஞ்சாபின் ஹோஷியார்பூர் மற்றும் ஃபெரோஸ்பூரிலும் மின்சாரம் தடைபட்டுள்ளது. உதம்பூர், அக்னூர், நௌஷேரா, பூஞ்ச், ராஜௌரி, மேந்தர், ஜம்மு, சுந்தர்பனி, ஆர்.எஸ். புரா, அர்னியா, கதுவா ஆகிய இடங்களில் டிரோன் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் இந்தியா ராணுவத்தைத் தொடர்புகொண்டு பேசியதாகவும், வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!