பாகிஸ்தான் PoK-ஐ விட்டு வெளியேற வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

Published : May 12, 2025, 09:33 PM ISTUpdated : May 12, 2025, 09:36 PM IST
Prime Minister Narendra Modi (Photo/ANI)

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின் மோடி உரையாற்றினார். பாகிஸ்தான் PoK-ஐ விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்த மோடி, பயங்கரவாதத்திற்கு தக்க பாடம் புகட்டியதாகக் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு உறுதியான எச்சரிக்கையை அறிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கைவிட்டு வெளியேறுவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதிக்கான உறுதிமொழி என்று பிரதமர் மோடி கூறினார். பயங்கரவாதிகளை அழிக்க நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்ததாக மோடி தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் வெறும் பெயர் அல்ல:

ஆபரேஷன் சிந்தூர் வெறும் பெயர் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்திய மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு என்று மோடி கூறினார். இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், நாட்டு மக்கள் சார்பாக இந்திய ராணுவத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் PoK-ஐ விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நமது வீரர்களுக்கு எனது வணக்கம்:

ஆபரேஷன் சிந்துரில் பங்கேற்ற நமது வீரர்களுக்கு எனது வணக்கம் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த நடவடிக்கையில் அவர்கள் வீரதீரச் செயல்களைப் புரிந்ததாகவும், பாகிஸ்தான் PoK-ஐ விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாதிகளின் கொடூரம் தாங்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. குடும்பத்தினர், குழந்தைகள் முன்னிலையில் அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். நம் தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை நாம் காட்டியுள்ளோம். பயங்கரவாதத்திற்கு தக்க பாடம் புகட்டியுள்ளோம் என்று மோடி கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!
பீகார் SIR பணியில் தில்லுமுல்லு.. நீக்கப்படாத 5 லட்சம் போலி வாக்காளர்கள்!