’கொஞ்சம் டைம் கொடுங்க...’ இந்தியாவிடம் சரண்டரான பாகிஸ்தான்..!

By Thiraviaraj RMFirst Published Feb 25, 2019, 2:06 PM IST
Highlights

புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 
 

புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 49 பேர் உயிரிழந்தது இந்தியாவையே அதிர வைத்தது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனால், பாகிஸ்தான் அதனை பொருட்டாக கருதவில்லை. 

இதனையடுத்து பாகிஸ்தான் மீதான இறக்குமதி வரி 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’’பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பார்த்து அவர் ஒரு பதான் இனத்தை சேர்ந்தவராக இருந்தால், அந்த இனத்தின் பெயரை காப்பாற்றுங்கள்’ என்று ஆவேசமாக பேசினார்.

பதான் இனம் ஈரானை பூர்வீகமாக கொண்டது. அவர்கள் நீதி நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், மோடியின் இந்தபேச்சு இம்ரான் கான் சூடேற்ற அதற்கு அவர் பதிலளித்திருக்கிறார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘' இம்ரான் கான் சொன்ன வாக்கை காப்பாற்றுவார். புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கும் தாக்குதலில் தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரங்களை அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு இந்தியா கால அவகாசம் தர வேண்டும்'' எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

click me!