சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த மினியேச்சர் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பலி!

Published : Nov 19, 2025, 06:11 PM IST
Miniature Toy

சுருக்கம்

ஒடிசாவின் கண்டமால் மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதால் நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தான். இந்த சம்பவம் உணவுப் பொருட்களில் உள்ள சிறிய பொம்மைகளின் அபாயம் குறித்து எச்சரிக்கிறது.

ஒடிசாவின் கண்டமால் மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிறிய அளவிலான (miniature) பொம்மையை விழுங்கிய நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்தச் சோக சம்பவம் டாரிங்பாடி வட்டாரத்தில் உள்ள முசுமகாபடா கிராமத்தில் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் பிகில் பிரதான், ரஞ்சித் பிரதான் என்பவரின் மகன் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

விபரீதமான விளையாட்டு

சிறுவனின் தந்தை வாங்கி வந்த சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்து பார்த்தபோது, சிப்ஸுடன் ஒரு சிறிய பிளாஸ்டிக் பொம்மை துப்பாக்கியும் இருந்துள்ளது. செவ்வாய்க்கிழமை, பெற்றோர்கள் சற்று தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சிறுவன் அந்தப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது திடீரென சிறுவன் அழுவதைக் கண்ட பெற்றோர், அவனது வாயிலிருந்து பொம்மையை அகற்ற முயன்றனர், ஆனால் முடியவில்லை.

மருத்துவமனையில் மரணம்

உடனடியாக, கிராமத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாரிங்பாடியில் உள்ள சுகாதார மையத்திற்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாகக் கூறினர்.

"சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பொம்மை சிறுவனின் சுவாசப்பாதையை அடைத்ததால் தான் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது என்று சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜாகேஷ் சமந்தராய் தெரிவித்துள்ளார்.

புகார் எதுவும் இல்லை

இது தொடர்பாக சிறுவனின் மரணம் குறித்து இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் பிற உணவுப் பொருட்களில் குழந்தைகளைக் கவரும் விதமாக வைக்கப்படும் சிறிய பொம்மைகள் (choking hazards) குறித்து பெற்றோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
மோடி அழுத்தத்திற்கு அடிபணியும் தலைவர் அல்ல, இந்தியா வளர்ந்து வரும் சக்தி - புதின் புகழாரம்