கல்விக்காக எதிப்பு அலைகளில் நீந்திய நியாஸ் கான் மற்றும் அவரது 11 மகள்கள்; ஆசிரியர் ஆனது இப்படிதான்!!

Published : May 05, 2023, 04:51 PM ISTUpdated : May 05, 2023, 04:52 PM IST
கல்விக்காக எதிப்பு அலைகளில் நீந்திய நியாஸ் கான் மற்றும் அவரது 11 மகள்கள்; ஆசிரியர் ஆனது இப்படிதான்!!

சுருக்கம்

கல்விக்காக பஞ்சாப் வக்ஃப் வாரியத்தின் முன்னாள் வருவாய் அதிகாரியான நியாஸ் கான் மற்றும் அவரது 11 மகள்கள் போராடியது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

கல்விக்காக பஞ்சாப் வக்ஃப் வாரியத்தின் முன்னாள் வருவாய் அதிகாரியான நியாஸ் கான் மற்றும் அவரது 11 மகள்கள் போராடியது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. பஞ்சாப் வக்ஃப் வாரியத்தின் முன்னாள் வருவாய் அதிகாரியான நியாஸ் கான் இந்த உலகத்தை விட்டு வெளியேறினார், ஆனால் அவர் தனது 11 மகள்களுக்கும் நல்ல கல்வியை வழங்கியதன் மூலம் நூஹில் உள்ள முஸ்லிம்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக நினைவுகூரப்படுகிறார். அவர் தனது மகள்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமல்லாமல், அவர்களில் 8 பேர் ஆசிரியர்களாகவும், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றில் கல்வியைப் பரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Awaz-The Voice உரையாடலின் போது பேசிய 11 பேரில் ஒருவரான ஷப்னம், நானும்  எனது சகோதரிகளும்  ஆசிரியர்களாக இருக்கும் எங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் கைவிடாமல், பள்ளியை விட்டு வெளியேறாமல் இருக்க முயற்சி செய்கிறோம். எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதோடு, அதிகமான பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதைக் காண நாங்கள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

இதையும் படிங்க: தீவிரவாத சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் தி கேரளா ஸ்டோரி.. காங்கிரஸ் வேலை இது - பிரதமர் மோடி பேச்சு

பெண் மாணவர்களைத் தக்கவைக்க, மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துகிறோம். அரசுப் பள்ளியில் சேர்வதற்கு முன் நீண்ட காலம் அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிந்த நான், என்னுடைய தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உள்ள அனுபவத்தால், மற்ற சகோதரிகளை விட இந்த வேலையில் (பள்ளியில் பெண் மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்வது) குறைவான சிரமங்களை எதிர்கொள்கிறேன். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் குழந்தை கல்வியில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு உதவுகிறது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பள்ளிகளை தரம் உயர்த்த உதவுகிறது என்று தெரிவித்துள்ளார். 

ஷப்னம் இப்போது டிஜிடி அதாவது ரித்தோடா கிராமத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியை. அவர் முன்பு பணிபுரிந்த ஆரம்பப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. இதுக்குறித்து ஷப்னத்தின் மூத்த சகோதரி நஃபிசா கூறுகையில், பல பெற்றோர்கள் என்னுடன் மற்றும் எனது அனைத்து ஆசிரியர் உடன்பிறப்புகளையும் கலந்தாலோசிக்க வருகிறார்கள். தங்கள் மகள்களுக்கு நல்ல எதிர்காலத்தை எப்படி உறுதி செய்வது என்று எங்களிடம் கேட்கிறார்கள். பல முறை அறிமுகம் இல்லாதவர்கள் எங்களை பேருந்து நிலையத்தில் நிறுத்தி பாராட்டுவதோடு தங்கள் மகள்கள் எங்களைப் போல இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். 

நூஹ் ஹரியானாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது, அங்கு பெண்கள் கடுமையான ஆணாதிக்கம், பழங்கால எண்ணங்கள், பரவலான கல்வியறிவின்மை மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியில் போராடுகிறார்கள். மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக உள்ளது. நூஹில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருந்தாலும், அதில் பல்கலைக்கழகம் இல்லை, பெண்கள் உயர்கல்விக்கு வெளியில் செல்ல வேண்டும். மேவாட் விகாஸ் மஞ்ச் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆசிப் அலி சந்தானி கூறுகையில், மாவட்டத்தில் 70 முதல் 80 சதவீதம் பேர் சிறு, குறு தொழில் செய்து பிழைத்து வருகின்றனர்.

அத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு கல்வி கற்பிக்க முடிவெடுக்கும் போது, நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பை அவர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். இறுதியில் அவர்கள் தங்கள் பெண்களை வீட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். தொண்ணூறுகளின் தசாப்தத்தில் இத்தகைய பழமைவாத மரபுகளை மீறி, நியாஸ் கான் தனது மகள்களை உயர்கல்விக்கு அனுப்ப முடிவு செய்தார். அவாஸுடன் பேசிய சகோதரிகளில் மூத்தவரான நஃபிசா, தங்கள் தந்தைக்கு மாற்றத்தக்க வேலை இருப்பதாகக் கூறினார். குடும்பம் மேவாத்துக்கு வெளியே வசிக்கும் வரை, அவர் தனது மகள்களுக்கு கல்வி கற்பதில் எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லை.

இதையும் படிங்க: மிகப்பெரிய புயல் தாக்க போகிறது.. மே 11 வரை உஷார் நிலையில் உள்ள மாநிலங்களின் பட்டியல்..

இருப்பினும், அவர் ஒரு விபத்தில் சிக்கி, விருப்ப ஓய்வு பெற்று, 1993 இல் நிரந்தரமாக நூஹ்வுக்கு மாறிய பிறகு, அவர் தனது மகள்களை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கு கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். அவரது தந்தை நூஹ் நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தைனி கிராமத்தில் வசிப்பவர். அங்குள்ள மக்கள் முற்போக்கானவர்களாகவும், கல்வி பற்றிய விழிப்புணர்வோடு தெளிவாகவும் உள்ளனர். தனது தந்தை மற்றும் தாத்தாவைப் புகழ்ந்து பேசும் ஷப்னம், இருவரும் மிகச் சிறந்த மனிதர்கள். தாதா (தந்தைவழி தாத்தா) எங்களை கல்லூரிக்கும் பள்ளிக்கும் செல்வதை ஒருபோதும் தடுக்கவில்லை. தொண்ணூறுகளில், இன்று நீங்கள் பார்ப்பதை விட மோசமான சூழல் இருந்தபோது, அவர் தனது மகள்களுக்கு உயர் கல்வியைத் தொடர்ந்தது மட்டுமல்லாமல், நூஹிலிருந்து படிப்புக்காக வெளியே அனுப்பினார்.

ஷப்னம் சட்டமும் படித்துள்ளார்; அவரது கணவர் சோஹ்னாவில் வழக்கறிஞர். அவர்களைச் சுற்றியுள்ள பிற்போக்கு சூழல் இருந்தபோதிலும், நியாஸ் கானின் எட்டு மகள்களும் ஆசிரியர்களாக ஆனார்கள். அவர்கள் அரசு பள்ளிகளில் பணிபுரிகின்றனர். கற்பிப்பது அவர்களின் விருப்பம் என்று ஷப்னம் கூறுகிறார். ஷப்னத்துக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவரது மகள்களில் ஒருவர் பனாரஸில் நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரது மற்ற குழந்தைகளும் முதுநிலை மற்றும் பிற உயர்கல்வி படிப்புகளில் உள்ளனர். பெண்களின் கல்விக்கான உந்துதல் முஸ்லீம்களின் வீடுகளிலிருந்தே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் விட்டுவிட முடியாது. மேவாட்டின் அரசியல்வாதிகள் மன உறுதியைக் காட்ட வேண்டும் என்று ஷப்னம் தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் அடுத்த டூர்! ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்!
120 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்! ரூ.2,500 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!